top of page
Jesus is the Way
“I am the way and the truth and the life. No one comes to the Father except through me" - John 14:6

Home: Welcome
Search


கடைசி நாட்கள்: நாம் வஞ்சிக்கப்படுகிறோமா? – பகுதி 1
நாம் அசாதாரணமான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் — நமது வாழ்நாளில் இதற்கு முன்பு பார்த்திராத பல காரியங்களை இப்போது கண்டு வருகிறோம். கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று, உக்ரைன் போர், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றங்கள் போன்ற உலகளாவிய நிகழ்வுகளை பார்க்கிறோம். இவை வழக்கமான காலங்கள் அல்ல; உலகில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பு: இந்த முக்கியமான தலைப்பைப் புரிந்துகொள்ளவும், தேவனுடைய வருகைக்கு நாம் ஆயத்தமாகி அவருடைய
Kirupakaran
Apr 197 min read


கனி தரும் சபை எவ்வாறு உருவானது?
கலங்கரை விளக்கத்தின் நோக்கத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அது ஒட்டுமொத்த நிலப்பரப்பையோ அல்லது கடற்கரையையோ முழுமையாக ஒளிரச் செய்யாமல் போகலாம். ஆனால் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு வழிநடத்துவதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. கடல் இருளாகவும் ஆபத்தாகவும் காணப்படும் புயல் நிறைந்த இரவில், அந்த கலங்கரை விளக்கிலிருந்து வரும் ஒரு சிறிய ஒளிக்கதிர், மாலுமிகள் தங்கள் வழியைக் கண்டறிய உதவுகிறது. அதேபோல், சபை சிறியதாகவோ, கவனிக்கப்படாததாகவோ தோன்றலாம்;, ஆனால் கிறிஸ்துவின்
Kirupakaran
Apr 126 min read


பரிசுத்த ஆவியானவரின் மூன்று ஊழியங்கள் – பகுதி 2
நமது அன்றாட வாழ்க்கையில், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுபவர்கள் உட்பட பலரை நாம் சந்திக்கிறோம். அவர்களிடையே ஒரு தெளிவான வித்தியாசத்தை நாம் கவனிக்கலாம். சில விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் அன்பு, தாழ்மை என கிறிஸ்துவின் குணாதிசயங்களை உண்மையாகவே பிரதிபலிக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள், அணுகுமுறைகள் மற்றும் செயல்கள் தேவன் அவர்களுக்குள் செய்த மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், மற்ற சிலரின் வாழ்க்கை அவர்களைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து எந்த விதத்தில
Kirupakaran
Mar 295 min read


பரிசுத்த ஆவியானவரின் மூன்று ஊழியங்கள் - Part 1
நமது அன்றாட வாழ்க்கையில், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுபவர்கள் உட்பட பலரை நாம் சந்திக்கிறோம். அவர்களிடையே, ஒரு தெளிவான வித்தியாசத்தை நாம் அடிக்கடி கவனிக்கிறோம். சில விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் அன்பு, தாழ்மை என கிறிஸ்துவின் குணாதிசயங்களை உண்மையாகவே பிரதிபலிக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள், அணுகுமுறைகள் மற்றும் செயல்கள் தேவன் அவர்களுக்குள் செய்த மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், மற்ற சிலரின் வாழ்க்கை அவர்களைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து எந
Kirupakaran
Mar 224 min read


உள்ளம் காயப்படும்போது... விசுவாசி என்ன செய்வான்?
நாம் வாழும் இந்த உலகில் மனக்காயங்களும் அவமானங்களும் தவிர்க்க முடியாதவை. உடலில் ஏற்படும் காயங்கள் காலப்போக்கில் ஆறிவிடும், சில நேரங்களில் அவை தழும்புகளை விட்டுச் செல்லக்கூடும். ஆனால் உள்ளத்தில் ஏற்படும் காயங்கள் கண்ணுக்குத் தெரியாதவை மேலும் அவை ஆறுவது மிகவும் கடினம். மற்றவர்கள் அதை ஒருபோதும் கவனிக்காவிட்டாலும், இந்த உள்மன வடுக்கள் நம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வடிவமைக்கின்றன. இத்தகைய தருணங்களில், மனக்காயங்களைக் கையாள்வது குறித்து வேதம் நமக்குத் தரும் வழிகாட்டுதல் என்ன? க
Kirupakaran
Mar 157 min read


யாபேசின் ஜெபம்: வலியிலிருந்து வெற்றிக்கு
சில நேரங்களில் நாம் நீண்ட காலமாக ஜெபித்துக் கொண்டிருப்போம், ஆனால் எதுவுமே மாறுவது போலத் தெரியாது. மெதுவாக, ஜெபம் ஒரு வழக்கமாக மாறி, நம் இருதயம் சோர்வடைகிறது. ஆனால், உண்மையான, ஊக்கமான ஒரு ஜெபம் எல்லாவற்றையும் மாற்றும் என்பதை வேதாகமம் நமக்குக் காட்டுகிறது. ஜெபத்தின் வல்லமை நாம் எத்தனை முறை ஜெபிக்கிறோம் என்பதில் இல்லை; நாம் எப்படி ஜெபிக்கிறோம் என்பதிலும், தேவனுக்கு முன்பாக நம் இருதயத்தின் உண்மையிலுமே இருக்கிறது. ஒரு ஜெபம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அது ஊக்கமானத
Kirupakaran
Mar 88 min read


ஏன் உங்கள் ஜெபம் பலன் தருவதில்லை? வரிசை முறை தெரியுமா?
விசுவாசிகளாகிய நம்மில் பெரும்பாலோர் ஒரு பழக்கமான முறையைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். பிரச்சனைகளோ சவால்களோ எழும்போது முதலில் ஜெபிக்கிறோம். ஜெபத்தால் மட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் அதன் பிறகு உபவாசத்தையும் ஜெபத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அப்போஸ்தலர் புத்தகத்தில் ஆழமான போதனையைத் தரும் ஒரு பாடத்தைக் காண்கிறோம். பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களை வேறு வரிசையில் வழிநடத்தினார். அவர்கள் பதில்களுக்காக ஜெபத்துடன் தொடங்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் முதலில் கர்த்த
Kirupakaran
Mar 16 min read


சுயம்: தேவ திட்டத்திற்கு எதிரி
நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் தேவனின் திட்டத்திற்கு ஏற்றவாறு செயலாற்றவே விரும்புகிறோம். நம்மில் பலர் அடிக்கடி, நான் தேவனின் சித்தத்தைச் செய்ய விரும்புகிறேன் என்று கூறுகிறோம். ஆனால் இந்த விருப்பம் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிகிறது. சிலர் தேவனின் சித்தம் உண்மையிலேயே என்ன என்பதைப் புரிந்து கொள்ள ஒருபோதும் நேரம் ஒதுக்குவதில்லை. மற்றவர்கள் அவருடைய திட்டத்தைத் தெளிவாக அறிந்திருக்கிறார்கள் — ஏனெனில் தேவன் அதை வெளிப்படுத்தி, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு அபிஷேகமும் செய்திருக
Kirupakaran
Feb 228 min read


ஜீவத்தண்ணீரால் நிரம்பிய வாழ்வு
பூமியில் உள்ள மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் நீரே வாழ்வாதாரமாக இருக்கிறது. நீர் இன்றி உயிர் வாழ முடியாது. ஆதியிலேயே தேவன் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். படைப்பின் இரண்டாம் நாளில், ஜலத்தைப் பிரிப்பதற்கும், உயிர் நிலைத்திருப்பதற்கான வழியாக அமைவதற்கும் அவர் ஆகாயவிரிவை உருவாக்கினார். பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். ஆதியாகமம் 1:6 தண்ணீரின்
Kirupakaran
Feb 86 min read


விசுவாசிகளின் பொறுப்புகள்
கிறிஸ்துவில் இரட்சிக்கப்பட்ட நாம் யாரும் தற்செயலாக அவரிடம் வந்தவர்கள் அல்ல. நமது இரட்சிப்பு தேவனுடைய கிருபையினாலும் அவருடைய நித்திய திட்டத்தினாலும் நிகழ்ந்ததாகும். எபேசியர் 1:12 இல் வேதம் கூறுகிறபடி தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம் என்று வேதம் கூறுகிறது. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்
Kirupakaran
Feb 15 min read


நோக்கத்துடன் கட்டியெழுப்பும் ஆண்டு
ஒவ்வொரு முறை, புதிய ஆண்டுக்குள் நாம் அடியெடுத்து வைக்கும்போதும், பெரும் நம்பிக்கைகளுடனும் உறுதியான தீர்மானங்களுடனும் ஆரம்பிக்கிறோம். ஆனால் திரும்பிப் பார்த்தால், அந்த ஆண்டு பெரும்பாலும் கலவையானதாகவே மாறியிருக்கும் - பல திட்டங்கள் நிறைவேறாமல் போகின்றன, பல நோக்கங்கள் பாதியிலேயே நின்று போகின்றன. உண்மையில், புத்தாண்டு என்பது கடிகாரத்தின் மீளமைப்பே (Reset) தவிர வேறில்லை. ஒரு நாள், நாளாகவே தான் இருக்கிறது. நேற்றைய வழக்கங்கள் இன்றைய தினத்திலும் தொடர்கின்றன. இருப்பினும், புதிய ஆண்டு
Kirupakaran
Jan 188 min read


ராஜாவின் பிறப்பு: இம்மானுவேல்
ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிறோம். அவருடைய பிறப்பு ஒரு சாதாரண பிறந்தநாள் போலல்லாமல் நம் இருதயங்களை ஆச்சரியத்தால் நிரப்பும் அதிசயங்களால் நிறைந்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முழுவதும், இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள ஆழமான சத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இரண்டு வாரங்களாக, மரியாளின் விசுவாசம், யோசேப்பின் கீழ்ப்படிதல், அவர்கள் ஒன்றாக மேற்கொண்ட பயணம் ஆகியவற்றைக் குறித்து சிந்தித்தோம். பரலோக நற்செய்தி எவ்வாறு சாதா
Kirupakaran
Jan 45 min read


பரலோகத்தின் முதல் அறிவிப்பு: மேய்ப்பர்களின் கதை
நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது, ஆனால் ஒரு சாதாரண பிறந்தநாளைப் போலல்லாமல், இயேசுவின் பிறப்பு இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அற்புதங்களால் சூழப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கதையை நாம் ஆழமாக நோக்கும் போது, தொட்டிலில் கிடந்த குழந்தையை மட்டுமே நாம் காண்பதில்லை - வானம் பூமியைத் தொடும் தருணத்தையும், இரவின் அமைதியை உடைக்கும் தூதர்களின் அறிவிப்பையும், தாழ்மையான இருதயங்களுக்கு முன்பாக வெளிப்படும் தெய்வீகத் திட்டத்தையும
Kirupakaran
Dec 28, 20255 min read


பரலோகத்தின் முதல் அறிவிப்பு: யோசேப்பும் மரியாளும்
நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது, ஆனால் ஒரு சாதாரண பிறந்தநாளைப் போலல்லாமல், இயேசுவின் பிறப்பு இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அற்புதங்களால் சூழப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கதையை நாம் ஆழமாக நோக்கும் போது, தொட்டிலில் கிடந்த குழந்தையை மட்டுமே நாம் காண்பதில்லை - வானம் பூமியைத் தொடும் தருணத்தையும், இரவின் அமைதியை உடைக்கும் தூதர்களின் அறிவிப்பையும், தாழ்மையான இருதயங்களுக்கு முன்பாக வெளிப்படும் தெய்வீகத் திட்டத்தையும
Kirupakaran
Dec 21, 20257 min read


உயர்த்தப்பட்ட கரங்களின் வல்லமை
ஒரு யுத்தத்தில் யாராவது தங்கள் கைகளை உயர்த்தினால் அதன் அர்த்தம் என்ன என்பதை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது சரணடைவதற்கான ஒரு அடையாளம் - "எனக்கு உதவி தேவை. எனக்கு பாதுகாப்பு வேண்டும்" என்று சொல்லும் ஒரு வழி அது. அதேபோல், ஜெபத்தை மக்கள் பல்வேறு முறைகளில் வெளிப்படுத்துகிறார்கள்: சிலர் முழங்காலில் இருந்து ஜெபிக்கிறார்கள் சிலர் கைகளை உயர்த்தி ஜெபிக்கிறார்கள், சிலர் தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து ஜெபிக்கிறார்கள். ஆனால் அவரிடத்தில் நம்முடைய கைகளை உயர்த்துவதில் ஒரு
Kirupakaran
Dec 14, 20257 min read


தேவனுடைய சித்தமே நியாயத்தீர்ப்பின் ஆரம்பம்
ஒரு இளைஞன் சபையில் பாடுவது, ஜெபிப்பது, காரியங்களை ஒழுங்குபடுத்துவது என தேவாலயத்தின் அனைத்து செயல்களிலும் ஈடுபட்டிருந்தான். எல்லோரும் அவனை தீவிரமான ஆவிக்குரியவனாகக் கருதினர். ஆனால் ஒரு நாள் ஒரு மூப்பர் மெதுவாக அவனிடம், “சகோதரரே, நீங்கள் தேவனுக்காக பல காரியங்களைச் செய்கிறீர்கள். ஆனால் தேவன் உண்மையில் கேட்பதை நீங்கள் எப்போதாவது செய்கிறீர்களா?” என்று கேட்டார். அந்தக் கேள்வி அந்த இளைஞனைத் தொந்தரவு செய்தது. அவன் சுறுசுறுப்பாகவும், அர்ப்பணிப்புடனும், உண்மையுடனும் செயல்பட்டவன் - ஆன
Kirupakaran
Nov 30, 20256 min read


தேவனின் குரலைக் கேட்பது எப்படி?
வாகனம் ஓட்டும்போது, நம் கவனம் சாலையில் நிலைத்திருப்பதால், நம்மைச் சுற்றியுள்ள ஒலிகளை பெரும்பாலும் நாம் கவனிப்பதில்லை. அதேபோல், நம் இருதயங்களும் மனங்களும் பிற விஷயங்களில் மூழ்கியிருக்கும்போது, ஆவிக்குரிய உலகில் தேவனுடைய சத்தத்தை நாம் எளிதில் தவறவிடுகிறோம். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். மத்தேயு 13:9 மத்தேயு 11:15 இல் கூறியதையே இயேசு மீண்டும் இங்கே கூறுகிறார். இதன் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது என்றால் வெறும் காதுகளால் கேட்பது மட்டுமல்ல, இருதயத்தால் உ
Kirupakaran
Nov 24, 20257 min read


அழியாத செல்வங்களைப் பெற்றுக்கொள்வது எப்படி?
நீங்கள் பங்குகள், தங்கம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து வருகிறவர்களாயிருந்தால், Systematic Investment Plan (SIP)என்ற முதலீட்டுத் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் - இது கூட்டு வட்டி மூலம் காலப்போக்கில் செல்வத்தை வளர்ப்பதற்கான ஒரு முறையாகும். இன்று நிலையான முதலீடுகளைச் செய்வதன் மூலம் நாளை அதிக வருமானங்களைப் பெறுவது இதன் முக்கிய நோக்காகும். ஆனால் இயேசு அதைவிட மிகச் சிறந்த ஒரு முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் - அதாவது ஒருபோதும் மதிப்பை இழக்காத, நித்த
Kirupakaran
Nov 16, 20256 min read


சோதனைக்கு பின் வரும் வெற்றி
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பொதுவான பலவீனம் உள்ளது - சோதனையின் ஈர்ப்பு. தவறு என்று ஏற்கனவே அறிந்திருந்தாலும், அதைச் செய்யத் தூண்டும் விசித்திரமான உள் தூண்டுதல் தான் அது. கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது கேக் துண்டையேப் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது மருத்துவர் கூடாது என்று சொல்லியும் இனிப்பை எடுக்க முயல்வது என நாம் அனைவரும் அதை எதிர்கொண்டுள்ளோம். வயதுக்கு ஏற்ப ஆசை மாறுகிறது - ஒரு குழந்தையை ஈர்க்கும் விஷயம் ஒரு பெரியவரை ஈர்க்காமல் போகலாம், ஆனால் போராட்டம் அதேதான்.
Kirupakaran
Nov 2, 20256 min read


தேவனுக்கு சாட்சியாக வாழ்தல்
ஒரு விபத்து நிகழ்ந்த இடத்தில், நேரில் கண்ட சாட்சி மிக முக்கியமானது - உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். அதே போலவே, ஒரு குற்றச் செயலின் நேரத்திலும் சாட்சி இல்லையெனில் உண்மை மறைந்தே போகும். இதை நாம் அன்றாட வாழ்க்கையில் நன்றாகவே புரிந்து கொள்கிறோம். ஆனால் தேவன் நம்மைத் தம்முடைய சாட்சிகளாக அழைக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அதன் அர்த்தம் என்ன - அதை நாம் எவ்வாறு வாழ்ந்து காட்ட வேண்டும்? இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு கூறினார்: பரிசுத்த ஆவி உங்களிடத்தில்
Kirupakaran
Oct 26, 20257 min read
bottom of page