top of page
  • Kirupakaran

தேவனின் இரக்கம் மற்றும் தயை குறித்த ஆய்வு



ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு ஆரோக்கியமான இரத்தம் தேவை. இரத்த சிவப்பணுக்கள் (RBC) மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) இருந்தால், இரத்தம் ஆரோக்கியமாக இருக்கும். இது உடலைத் தாக்கும் தாக்கும் வைரஸை எதிர்த்துப் போராட உடலின் ஒவ்வொரு உயிரணுவுக்கும் பல்வேறு செயல்பாடுகளுடன் உதவுகிறது. சில சமயங்களில் உடலின் வளர்ச்சிக்குத் தேவையான சரியான தாதுக்களை வழங்குவதற்கு இது ஒரு கடத்தியாக உதவுகிறது.

தேவனின் காரியத்திலும் அப்படித்தான். இயேசு தம் ஜீவனை நமக்காகக் கொடுத்து  சிலுவையில் இரத்தம் சிந்தினார். நம் இரட்சகராகிய இயேசு நம் ஒவ்வொருவரையும் பாவ இருளிலிருந்து காப்பாற்ற சிலுவையில் இந்தத் தியாகத்தைச் செய்தார். அவர் இரக்கமும் தயவும் கொண்டவர், இந்த குணத்தினால் அவர் சிலுவைக்குச் சென்று நமக்காக மரணத்தை ஜெயித்தார், பாவங்களிலிருந்து விடுதலையையும் பெற்றுத் தந்தார்.


உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17


அவர் நம்மீது இரக்கமுள்ளவர், தயவுள்ளவர் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். எனவே, அவரிடம் இருக்கும் இந்த இரக்கமும் தயவும் என்ன என்று பார்ப்போம்.


ஒரு இரத்தத்தில் எப்படி RBC மற்றும் WBC இருக்கிறதோ, அதுபோல, நம் ஆண்டவருக்கு இந்த இரக்கமும் (RBC), தயவும் (WBC) நம்மிடம் இருக்கிறது.

 

தேவ இரக்கம்

  • இரக்கம் என்றால் என்ன? இரக்கம் என்பது துன்பத்தில் இருப்பவர்களை தயவோடு நடத்துவது, குறிப்பாக அவர்களைத் தண்டிப்பது அல்லது தீங்கு விளைவிப்பது ஒருவருடைய சக்தியில் இருக்கும்போது, பரிவோடு நடந்து கொள்வது. இரக்கத்திற்கான விளக்கத்தை தேடிய போது இணையத்தில் நான் கண்ட வரையறை இதுதான்.

  • தேவ இரக்கம் என்றால் என்ன? எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ரோமர் 3:23.  உலகத்தில் நடக்கும்போது, ​​நாம் பல பாவங்களைச் செய்கிறோம், அதை சரியென உணர்கிறோம். ஆனால், நம்முடைய இரட்சகரின் பார்வையில்  நாம் பாவம் செய்தவர்களாக நிற்போம். அவருக்கு நம்மைத் தண்டிக்கும் அதிகாரம் இருக்கின்ற போதும், அவருடைய கிருபையினால் நாம் காப்பாற்றப்படுகிறோம்.

  • தேவன் ஏன் நம் மீது இரக்கம் காட்டுகிறார்? பல சமயங்களில் நாம் நம்முடைய சொந்த ஆசைகளால் மட்டுமல்ல, சாத்தானின் செயல்களாலும் பாவத்திற்கு இட்டுச் செல்லப்படுகிறோம். சாத்தான் சொல்வது சரியென்று நம்புகிறோம். சில சமயம் நாமும் இது பாவம் என்று தெரிந்தே வேண்டுமென்றே செய்கிறோம். சாத்தானின் செயலால் மகிமை இழந்த ஒருவரைத் தண்டிப்பது நியாயமற்றது. எனவே அவர் நமக்கு இரக்கம் காட்டத் தேர்ந்தெடுத்தார்.

இந்த இரக்கம் நமக்கு என்ன செய்கிறது?

1.   அவருடைய இரக்கத்தால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டோம்

  • தேவன் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்தார். நாம் அவரைத்  தேர்ந்தெடுக்கவில்லை. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:10,12-13

  • நீங்கள் தேவனிடம் வர விரும்பியதால் அவரிடம் வந்தீர்களா?  என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். நமது விருப்பமோ, முயற்சியோ அல்ல, தேவனின் இரக்கம் மட்டுமே! நாம் தேவனிடம் வர வேண்டிய சூழ்நிலையை வாழ்க்கையில் சந்தித்திருப்போம். அவருடைய இரக்கமே அந்த சூழ்நிலையில் அவரை நம்பி அவரைச் சார்ந்திருக்கும்படி நம்மை அழைத்துச் செல்கிறது.

2.   இரட்சிப்பும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் அவருடைய இரக்கத்தால்  நமக்கு வழங்கப்படுகின்றன.

  • இரட்சிப்பு - நம் இரட்சகராகிய இயேசு நமக்கு இரட்சிப்பைத் தருகிறார். அந்த இரட்சிப்பின் மூலம் நாம் இயேசுவை ஆண்டவர் என்று அறிந்து கொண்டோம். இந்த இரட்சிப்பின் மூலம் நித்திய வாழ்வுக்கான கதவுகள் நமக்கு உள்ளன. அவர் நம்மீது கொண்ட அன்பினால் இந்த இரட்சிப்பை நமக்காகக் கொடுத்தார். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, எபேசியர் 2:4

  • புத்திரசுவீகாரம் – விசுவாசத்தினால் அவருடைய புத்திர சுவீகாரத்தைப் பெற்றிருக்கிறோம். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:18 அவருடைய பிள்ளைகளாக அவரது எல்லையில்லாத இரக்கம், தயவு மற்றும் கிருபை வரங்களைப் பெற்றிருக்கிறோம்.

  • பாவங்களிலிருந்து விடுதலை - நாம் பாவங்களை ஒப்புக்கொள்ளும்போது அவர் நம்மை இரக்கத்தால் நிரப்புகிறார். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள் 28:13

  • அநீதியிலிருந்து நீதிக்கு - நம் வாழ்வில் பாவத்தில் மூழ்கி இருந்தோம். எப்போதும் சுய நீதிமானாக உணர்கிறோம். இருந்தும், அவருடைய அன்பினால் இந்த இரட்சிப்பை நமக்குத் தந்தார். இந்த செயலினால், நாம் ஒரு புது சிருஷ்டியாக மறுபிறவி எடுக்கிறோம். நாம் அவருடைய பார்வையில் நீதிமான்களாகும்படி பழைய அநீதியான வாழ்க்கை நீங்குகிறது. இந்த முழுச் செயலும் அவருடைய இரக்கத்தால் செய்யப்படுகிறது. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தீத்து 3:5

இந்த இரக்கம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறதா?

  • நமது இரட்சகராகிய இயேசுவின் இரக்கம் நமது ஆசைகள் அல்லது முயற்சியின் அடிப்படையிலானது அல்ல. அது அவரது முடிவை அடிப்படையாகக் கொண்டது. பாவம் செய்யும் சிலருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது. நீதிமானாயிருக்கும் சிலர், தங்களை சீக்கிரம்  குற்றப்படுத்தும்படிக்கு குறைவான இரக்கம் காட்டப்படுவதாக நினைக்கலாம். தேவனின் இரக்கம் அன்பிலிருந்து வெளிப்படுகிறது. ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். ரோமர் 9:16

  • அவர் சிலரை, தாவீதைப் போல் உருவாக்க முடியும். சிலரை  பார்வோனைப் போல் உருவாக்க முடியும். தேவன் இந்த உலகில் தமது திட்டத்தின் அடிப்படையில் செய்ய அவருக்கு ஒரு நோக்கமும் சித்தமும் உள்ளது. சிலரை தமது இரக்கத்தால், பார்வோனாக ஆக்குகிறார்.

  • இந்தக் கிருபை ஏன் ஒருவருக்கு அதிகமாகவும், இன்னொருவருக்கு வேறு விதமாகவும் இருக்கிறது என்று கேள்வி கேட்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, அவர் ஏன் என்னை விட சிறந்தவர் என்றோ நான் ஏன் அவரை விட சிறந்தவன் என்றோ தேவனைக்  கேள்வி கேட்காதீர்கள்.

    • ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். ரோமர் 9:18

    • அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? ரோமர் 9:20-21

  • தேவன் ஏன் ஒருவரை பார்வோனாகவும் ஒருவரை தாவீதாகவும் ஆக்கினார் என்பதை நமது மனித ஞானத்தால் புரிந்து கொள்ள முடியாது. அதே போல், ஏன் ஒருவருக்கு உயர்வாகவும் மற்றொருவருக்கு தாழ்வாகவும் இருக்கிறது என்று சொல்ல முடியாது.

    • ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!  ரோமர் 11:33

    • கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். ரோமர் 11:34-36

இந்தக் கிருபை எவ்வளவு பெரியது?

  • நாம் அவருடைய சிறகுகளின் கீழ் நடக்கும் போது இது தலைமுறை தலைமுறையாக நீடிக்கும். ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், உபாகமம் 7:9

  • அவருடைய போதனைகள், கட்டளைகளில் நாம் தவறினாலும் அல்லது அவற்றிற்கு எதிர்த்து நின்றாலும் அவர் இன்னும் நம்மிடம் இரக்கம் காட்டுகிறார். அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானியேல் 9:9-10

  • இரக்கம் தேவனின் குணம், அதை அளவிட முடியாது. ஒருவரின்  குணத்தை அளவிட முடியுமா? ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். லூக்கா 6:36

  • கிருபையையும் இரக்கத்தையும் அளிப்பதன் மூலம், அவருடைய இரக்கத்தின் வெளியீடாக, நமது பலவீனத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பச்சாதாபத்தை அவர் கொண்டுவருகிறார். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரேயர் 4:15-16

இரக்கமும் கிருபையும் எவ்வாறு வேறுபடுகின்றன?

  • இரக்கமும் கிருபையும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. சொற்கள் ஒரே மாதிரியான அர்த்தங்களைக் கொண்டிருந்தாலும், இவை இரண்டும் ஒரே மாதிரியானவை அல்ல.

  • இரக்கமானது கருணை மற்றும் தயவுடன் தொடர்புடையது; நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி தேவன் நம்மைத் தண்டிக்காத இடங்களில் இது அடிக்கடி பேசப்படுகிறது.

  • கிருபையானது இரக்கம் மற்றும் தயவை உள்ளடக்கியது. ஆனால் தேவனிடமிருந்து நமக்கு ஆதரவாக ஒரு பரிசைக் கொண்டுள்ளது.

  • நாம் நியாயத்தீர்ப்புக்கு தகுதியானவர்கள். ஆனால், கிறிஸ்துவினால் நாம் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்று நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். கிறிஸ்துவில் நாம் நித்திய இரட்சிப்பு, பாவ மன்னிப்பு மற்றும் வளமான வாழ்வைப் பெறுகிறோம். (திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவான் 10:10) - யாவும் கிருபையின் வரங்கள்.

  • தேவனின் கிருபை மற்றும் இரக்கத்திற்குப் பதிலாக நாம் அவருடைய பாதங்களில் விழுந்து அவரை ஆராதிக்க வேண்டும்.ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரேயர் 4:16

 

தேவ தயவு 

தயவு என்றால் என்ன?

  • தயவு என்பதற்கு “ஒன்றாகத் துன்பப்படுதல்" என்று அர்த்தம். உணர்ச்சியை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், “மற்றொருவரின் துன்பத்தை எதிர்கொள்ளும் போது, அந்தத் துன்பத்தைப் போக்க உந்துதலாக உணரும்போது எழும் உணர்வு” என வரையறுக்கிறார்கள். தயவு என்பதற்கு பச்சாதாபம், பரோபகாரம் என்பதோடு தொடர்புடைய கருத்துக்கள் இருந்தாலும் இவை யாவும் ஒன்றல்ல.

தேவ தயவு என்றால் என்ன?

  • தேவன், நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றும்படி மோசே மூலம் கொடுத்தார், ஆனால் சட்டம் மனித சுய விருப்பத்தைச் சார்ந்து இருந்தது. ஒவ்வொரு முறை நாம் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றும்போது, மனித ஆசை நம்மைப் பாவிகளாக்கும்படி நியாயப்பிரமாணத்தை உதறித் தள்ளியது.

  • தேவன் வேதனைப்பட்டு, இந்தப் பாவத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க விரும்பினார். எனவே அவர் தமது  ஒரே குமாரன் இயேசுவை பாவநிவாரண பலியாக அனுப்பினார். தேவனின் இந்த செயல் நம் பாவங்களின் மீதான இரக்கத்தினால் வந்தது. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். ரோமர் 8:3-4

  • அவருடைய தயவினால் கிருபையைப் பெறுகிறோம்.

  • அவருடைய தயவினால், நம்முடைய நிறைவற்ற நிலையிலிருந்து நம்மை பரிபூரணமாக்கும்படி அவர் தம்முடைய நீதியைக் கொடுக்கிறார்.

  • அவருடைய தயவினால், உலகத்தோடு போராடத் தம்முடைய பரிசுத்த ஆவியை நமக்குத் தருகிறார்.

  • அவருடைய தயவினால், நமக்கு பரிசுத்த ஆவியின் வரங்களைத் தருகிறார்.

  • அவருடைய தயவினால், ஆவிக்குரிய கனிகளின் முதல் பலன்களை நமக்குத் தருகிறார். ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தியர் 5:22-23

  • தமது பிள்ளைகளிடம் இரக்கமுள்ள நமது பிதா அவர்.  இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். ஏசாயா 54:7

  • நம்முடைய ஆசீர்வாதங்களை மீட்டெடுக்கவும் இரட்டிப்பாக்கவும் அவர் மிகவும் இரக்கமுள்ளவர். அவர்களை நான் பிடுங்கிப்போட்ட பிற்பாடு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள்தங்கள் சுதந்தரத்துக்கும் தங்கள்தங்கள் பூமிக்கும் திரும்பப்பண்ணுவேன். எரேமியா 12:15

  • நம் தேவன் நாம் செய்தவற்றின் அடிப்படையில் அல்லாமல் நம் முற்பிதாக்களுக்குத் தாம் அளித்த வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் நம்மீது இரக்கம் காட்டுகிறார். ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்கச் சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார். 2 இராஜாக்கள் 13:23

 

தேவன் யார் மீது தயவாயிருக்கிறார்?

  • கிறிஸ்தவரல்லாதவர்கள் அல்லது நம்முடைய இரட்சகராகிய இயேசுவை அறியாதவர்கள் - ஒரு புறஜாதியாக தேவனை அறியாதவர்களாக இருக்கும்போது (மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல), பாவத்தின் காரணமாக அவர்கள் அழிக்கப்படக்கூடாது என்று இரக்கம் காட்டுகிறார். அவர்கள் மீதுள்ள அன்பினால் அவர் தமது தயவைக் காட்டுகிறார். அவருடைய சிலுவையின் தியாகத்தின் மூலம் நாம் இரட்சிப்பைப் பெறுகிறோம்.

    • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:16-17

    • அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். மத்தேயு 9:36-38

  • தேவன் தமக்குப் பயந்தவர்களுக்கு தயவுள்ளவராயிருக்கிறார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். சங்கீதம் 103:13

  • அவர் தேவன் ஆதலால் அவருக்குப் பயந்திருங்கள். நம் மீதான அனைத்து அதிகாரங்களையும் அவர் வைத்திருக்கிறார். எதையும் செய்யும் அதிகாரம் அவருக்கு உண்டு

  • அவர் பாவத்தை வெறுப்பதால் அவருக்குப் பயந்திருங்கள். அதனால் எந்த பாவம் செய்தாலும், அவருடைய தண்டனையின் கோபத்திற்கு பயந்திருங்கள்.

  • அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவும் அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும் பயந்திருங்கள்.

  • நீங்கள் உங்களை எப்படி நேசிப்பீர்களோ அப்படி அவரை நேசிக்க பயந்திருங்கள்.

  • தேவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதால் அவர்கள் கடக்கும் போராட்டங்களில் பொறுமையோடிருப்பவர்கள் மீது அவரது இரக்கம் அதிகமாக இருக்கும். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே. யாக்கோபு 5:11

  • நம்மை நீதிமான்களாக்க இயேசு எப்படி சிலுவையில் மரித்தாரோ அதைப் போன்று கனிகளை விளைவிப்பதற்காக நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்கள் மீது தேவனின் தயவு அதிகமாக இருக்கிறது. நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். 1 பேதுரு 3:14,18

  • அந்தச் சூழ்நிலையில் அவர் நமக்காக பரிதபிக்கிறார் - நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரேயர் 4:15-16

 

இந்த இரக்கம் மற்றும் தயவை நாம் எவ்வாறு பெற்றுக் கொள்வது?

எளிய 3 (ABC) படிகள் மூலம் இந்த இரக்கத்தையும் தயவையும் நாம் பெறலாம்.

1. ஒப்புக்கொள்ளுங்கள் – A (ACCEPT)

  • நீங்கள் ஒரு பாவி, தேவனின் மகிமையிலிருந்து விழுந்தவர்கள், ஒரு அழுக்கான கந்தை என்று தேவனிடம் ஒப்புக்கொள்ளுங்கள். நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப் போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப் போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது. ஏசாயா 64:6

  • உங்கள் பெருமையையும் அருவருப்புகளையும் ஒப்புக்கொள்ளுங்கள். ஒப்புக் கொண்டபின் இரக்கத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். வெறுமனே வாயால் மட்டும் ஒப்புக்கொண்டு இருதயத்தில் மறுக்காமல், முழு மனதுடன் ஒப்புக்கொள்ளுங்கள்.

2. நம்புங்கள் – B (BELIEVE)

  • இயேசு உங்களைப் பாவத்திலிருந்து மீட்பவர் என்று நம்புங்கள். அவர் இல்லாமல், நீங்கள் கட்டுண்டு இருக்கும் பாவத்திலிருந்து விடுபட வழி இல்லை, அது நீங்கள் நினைக்கும் எந்தவொரு மோசமான பாவமாக இருந்தாலும் சரி.

  • இயேசுவில் விசுவாசம் முக்கியம், அது இல்லாமல் உங்களால் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரேயர் 11:6

3. அறிக்கை செய்யுங்கள் - C (CONFESS)

  • தேவனிடம் உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள். நீங்கள் அறிக்கை செய்து அவரிடம் சரணடைந்தால், அவர் பாவத்தை மன்னிக்க தமது இரத்தத்தால் கழுவுவார். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள் 28:13

  • உங்கள் நிலைமையை அவரிடம் அறிக்கை செய்யும் போது, அவர் ஆறுதலையும் சமாதானத்தையும் தருவார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11:28-29

  • உங்கள் ஆசைகள் / வாழ்க்கை இலக்குகளை அறிக்கை செய்யுங்கள், அவர் தமது சித்தத்திற்கு ஏற்ப அதை நிறைவேற்றுவார். உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். நீதிமொழிகள் 16:3-4

    

bottom of page