top of page
  • Kirupakaran

தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான இரகசியம்


நாம் அனைவரும் தேவனின் ஆசீர்வாதங்களை விரும்புகிறோம். ஆனால் சில சமயங்களில் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களால் நம் விசுவாசத்தில் இருந்து விலகிச் செல்கிறோம். நாம் சுயத்தில் அதிக கவனம் செலுத்தி, நமது சொந்த தேவைகளுக்காக மட்டுமே ஜெபிக்கிறோம்.


தேவன் நம்மிடம் கேட்கும் நல்ல விஷயங்களில் ஒன்று, மற்றவர்களுக்காக ஜெபிப்பதாகும். பொதுவாக, நாம் நமக்காகவும், நம் குடும்பத்திற்காகவும், நம் குழந்தைகளுக்காகவும் ஜெபிக்கிறோம். ஆனால் மற்றவர்களுக்காக ஜெபிப்பது எப்படி உங்களுக்கு ஆசீர்வாதங்களைத் தரும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. யாக்கோபு 5:16


நாம் நல்லவர்களாகவும், தவறுகளைத் தவிர்க்கவும் செய்யும் போது நமது ஜெபங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. நாம் ஏதாவது தவறு செய்துவிட்டு, வேறொருவருக்காக ஜெபித்தால், தேவன் நமக்குச் செவிசாய்க்க மாட்டார். எனவே, நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது, ​​தேவன் நம்முடைய சொந்த தவறுகளை நமக்குக் காட்டி, நம் தவறுகளுக்காக ("பாவம்") மனந்திரும்புவதற்கு நம்மைச் சுத்தப்படுத்துவதன் மூலம் நம்மை மேம்படுத்துவார். பின்பு, பிறருக்காக ஜெபிக்கும் பாரத்தை அவர் கொடுப்பார். அதன் மூலம், நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது நம் ஜெபத்திற்கு அவர் பதிலளிப்பார்.


மற்றவர்களுக்காக ஜெபிக்கும் ஒரு எளிய சவாலை எடுத்துக்கொள்ளும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். உங்கள் சொந்த வாழ்க்கை சுத்திகரிக்கப்படுவதோடு, உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஆசீர்வாதங்களையும் நீங்கள் விரைவில் காண்பீர்கள்.


மற்றவர்களுக்காக ஜெபிப்பதற்கான சவாலில் உங்களை மேலும் ஊக்குவிப்பதற்கு, யோபு தன் நண்பர்களுக்காக ஜெபித்த பின் தேவனிடம் இருந்து எப்படி ஆசீர்வாதங்களைப் பெற்றார் என்பதை அவருடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வோம்.


யோபின் வாழ்க்கை உதாரணம்


யோபுக்கு தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகிய மூன்று நண்பர்கள் இருந்தனர்.


யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள். யோபு 2:11


நண்பர்களுக்காக ஜெபித்தல்


யோபு தனது நண்பர்களுக்காக ஜெபித்த பின்னரே அவருக்கு ஆசீர்வாதம் தொடங்கியது.


யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். யோபு 42:10,12-13


  • யோபு, தான் இழந்ததை மீட்க வேண்டி அவருக்காக ஜெபிக்கவில்லை. யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்” என்று வார்த்தை கூறுகிறது.

  • யோபுக்கு கிடைத்த ஆசீர்வாதத்தின் பிற்பகுதி, அவர் அவரது நண்பர்களுக்காக ஜெபித்த பிறகே கிடைத்தது. “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது” - இதுவே ஆசீர்வாதத்தைத் திறக்க திறவுகோலாக இருந்தது.

  • கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், யோபுக்கு ஆசீர்வாதம் அவர் தனது நண்பர்களுக்காக ஜெபம் செய்ததினால் மட்டுமல்லாமல், அவர் துன்பத்தின் போது தேவனை சபிக்காமலும், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யாமலும், தேவனைக் குறித்து பொய் உரையாமல் இருந்ததாலும் வந்தது.

  • அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. யோபு 2:9-10

  • கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. யோபு 42:7

தேவனுக்கு முன்பாக யோபின் நீதி


  • நம் வாழ்க்கை தேவனுக்கான ஒரு சாட்சியாக இருக்க வேண்டும் - இங்கே தேவன் யோபு நல்லவர் என்று சாட்சியமளிக்கிறார். மேலும்,அவருடைய ஜெபத்தால் அவருடைய நண்பர்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

  • யோபின் துன்பங்களுக்கு முன்பு ஒரு முறை, சோதனையைக் கடந்த பின்பு ஒரு முறை என்று 2 முறை தேவன் யோபின் நீதியைக் குறித்து சாட்சியமளித்தார்.

  • யோபுவைப் பற்றி சாத்தானுக்கு தேவன் அளித்த சாட்சி - கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். யோபு 1:8

  • யோபுவைக் குறித்து எலிப்பாசுக்கு தேவன் அளித்த சாட்சி - கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. யோபு 42:7

  • நாம் நீதியுள்ளவர்களாக இருந்தால் மட்டுமே தேவன் நம்மைக் குறித்து சாட்சியமளிப்பார், நாம் அவருக்கு முன்பாக அநீதியாக இருக்கும்போது அவரால் சாட்சியமளிக்க முடியாது.

  • யோபு தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருந்து அவரது புலம்பல்களுக்காக வருந்தி மனந்திரும்பினார் ("ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்"). இது அவரது நண்பர்களுக்காக ஜெபிக்க அவரைத் தகுதிப்படுத்தியது.

  • தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். யோபு 42:2-3,6

  • நாம் நீதிமான்களாக இருந்தால், அநீதியானவர்களை சுத்திகரிக்க வேண்டி தேவனிடம் மன்றாடலாம்.

  • இங்கே யோபு, அவரது 3 நண்பர்களும் சுத்திகரிக்கும்படி அவர்களுக்காக மன்றாடும்படி கேட்கப்பட்டார். "என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத்தக்கதாக நடத்தாதிருப்பேன்;”.

  • ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத்தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார். யோபு 42:8.

யோபு எப்படி ஜெபித்தார்?


  • தன்னையும் தன் குடும்பத்தையும் பரிசுத்தப்படுத்த அதிகாலையில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவது தான் யோபின் வழக்கமான ஜெபம் ஆகும்.

  • அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள். விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான். யோபு 1:4-5.

  • ஒவ்வொரு நாளும் காலையில் அவருக்காக மட்டுமல்லாமல், அவருடைய குடும்பத்தினர் செய்த பாவங்களுக்காகவும் சுத்திகரிப்பதே தேவனுக்கு முன்பாக யோபு நீதிமானாக இருப்பதன் இரகசியம். இதை நாம் கற்றுக்கொண்டு நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும். நம் பாவங்களுக்காகத் தம் ஜீவனைத் தியாகம் செய்த இயேசுவை நாம் ஆராதிக்கிறோம். நாம் மனந்திரும்பி, நாம் செய்யும் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கும் போது தேவனின் பரிசுத்த இரத்தம் நம்மைச் சுத்திகரித்து, நம்மிடம் உள்ள பாவங்களைப் போக்கிவிடும்.

  • யோபு அவரது நண்பர்களுக்காக ஜெபிக்கும்படி கர்த்தர் கேட்கும் போது, அவர் தனக்காக எப்படி ஜெபிப்பாரோ, அதைப் போலவே ஜெபித்தார். இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்.

  • அவரது நண்பர்களுக்காக ஜெபிக்கும்படி கர்த்தர் யோபுவிடம் கேட்டபோது, தேவனுக்குப் பலி செலுத்தும் வழக்கமான முறைமைப்படி ஜெபித்தார்.

  • “ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; .....". யோபு 42:8(a)

  • அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும்போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார். யோபு 42:9.

  • யோபு 42:9 இன் பிற்பகுதியில் "அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்” என்று காண்கிறோம். யோபு நீதிமானாய் இருந்ததால்,அவருடைய ஜெபங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதை யாக்கோபு 5:16(b) விளக்குகிறது. - " ... நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது".

யோபின் ஆசீர்வாதங்கள்

யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள். கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான். தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான். இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான். யோபு 42:10-17


  • நித்திய ஆசீர்வாதம் - அவருக்கு ஏராளமாக இருந்தது (எண்ணற்ற) என்று வேதம் கூறுகிறது. "கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்;". யோபு 42:12(a) - அவர் பெற்ற நித்திய ஆசீர்வாதம் அவருடைய முந்தைய வாழ்க்கையில் இருந்ததை விட அதிகமாக இருந்தது.

  • இரட்டிப்பான உலக ஆசீர்வாதம் - இரண்டத்தனையாய் பெற்றுக் கொண்டார் என்று வார்த்தை கூறுகிறது. “கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்”. யோபு 42:10(b) - இது தேவனிடமிருந்து அவர் பெற்ற பொருளாதார ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது.

  • முந்தைய ஆசீர்வாதம் – “அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்”. யோபு 1:2-3

  • பிந்தைய ஆசீர்வாதம் - "... பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின". யோபு 42:12(b)

  • குடும்ப ஆசீர்வாதம்

  • குடும்பம் ஒன்றுபட்டது - இக்கட்டான காலங்களில் விலகியிருந்த குடும்பத்தினர் அனைவரும் அவரைச் சந்திக்க ஒன்று கூடி வந்தனர். ஒவ்வொருவரும் யோபுக்கு கொடுப்பதற்கு வெள்ளித் தட்டு மற்றும் தங்க மோதிரத்துடன் வந்தனர்.

    • அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள். யோபு 42:11

    • குடும்பத்தில் இருந்த தேவனின் ஒருமை இங்கு வெளிப்படுகிறது.

  • பிள்ளைகளின் ஆசீர்வாதம் - முந்தைய பகுதியில் அவருக்கு 7 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர். பிற்பாடு தேவன் இறந்து போன அதே எண்ணிக்கையிலான பிள்ளைகளை மீட்டுக் கொடுத்தார். (யோபு 1:18)

    • ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான். தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான். யோபு 42:13-15

    • நாட்டில் அந்த அழகுடன் ஒருவரைக் கூட காண முடியாத அளவுக்கு அழகான குமாரத்திகளை தேவன் அவருக்கு அளித்தார். "தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை;".

  • நீண்ட ஆயுள் - நான்காம் தலைமுறைப் பிள்ளைகளையும் காணும்படி, 140 ஆண்டுகள் வாழும்படியான ஒரு வாழ்க்கையை தேவன் யோபிற்கு ஆசீர்வதித்துக் கொடுத்தார். யோபு யாவற்றையும் முழுமையாகப் பார்த்த பிறகு முதிர் வயதில் இறந்து போனார்.

    • இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான். யோபு 42:16,17.

சுருக்கம்

பிறருக்காக ஜெபிப்பதன் இரகசியங்களை அறிந்த பின், அவர்களுக்காக ஜெபிப்பதற்கான சவாலுக்கு நீங்கள் தயாராகும்போது, அவர்களுக்காக ஜெபிப்பதற்கான சில நடைமுறை குறிப்புகள் இங்கே உள்ளன.

1. ஆழ்ந்த உணர்வோடும், உண்மையோடும் உள்ளத்திலிருந்து பிறருக்காக ஜெபியுங்கள். தேவன் யாருக்காக ஜெபிக்கத் தூண்டுகிறாரோ அவருக்காக இருதயத்தில் பாரம் தரும்படி தேவனிடம் ஜெபியுங்கள்.

2. மற்றவர்களுக்காக தவறாமல் ஜெபம் செய்யுங்கள் - ஆண்டவரின் ஜெபத்தில் இயேசு அதையே கற்பித்தார். அதில், "எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" என்று ஜெபிக்கும்படி இயேசு கூறுகிறார். நம் தேவைகளுக்காகவும் மற்றவர்களின் தேவைகளுக்காகவும் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க வேண்டும்.

3. தேவனுக்கு எல்லா வல்லமையும் உண்டு, நாம் ஜெபிக்கும் ஜனங்களை தேவன் நேசிக்கிறார் என்பதை அறிந்து, விசுவாசத்துடன் மற்றவர்களுக்காக ஜெபியுங்கள். நீங்கள் ஜெபிக்கும் நபரின் சூழ்நிலையை அவரால் மாற்ற முடியும் என்று நம்பிக்கையுடன் ஜெபியுங்கள்.

4. மற்றவர்களுக்காக அன்புடன் ஜெபம் செய்யுங்கள். ஆழமான தேவைகள், போராட்டங்கள் மற்றும் உணர்வுகளைக் கொண்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஜெபப் பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.

5. மற்றவர்களுக்காக ஊக்கமாகவும், தீவிரமாகவும், வைராக்கியத்தோடும், ஆர்வத்தோடும் ஜெபியுங்கள். நாம் ஊக்கமாக ஜெபிக்கும்போது, யாக்கோபு 5:16 இல் சொல்லப்பட்டதைப் போல ஜெபங்கள் வல்லமை வாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் - நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. யாக்கோபு 5:16

6. நம்மால் இயன்ற இடத்தில் உதவ வேண்டும் என்ற விருப்பத்துடன் மற்றவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். பல சமயங்களில் நம்மால் உடல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ உதவ முடியாமல் போகலாம், ஆனால் ஜெபத்தின் மூலம் அவர்களுக்குள்ள போராட்டங்களை முறியடிக்க உதவலாம்.

7. மற்றவர்களுக்காக அவ்வப்போது உபவாசமிருந்து ஜெபியுங்கள். ஒரு சூழ்நிலை மிகவும் தீவிரமாக இருக்கும் போது அவர்களுக்காக உபவாசம் இருந்து ஜெபியுங்கள்.


bottom of page