top of page
  • Kirupakaran

ஐசுவரியமும் தேவபயமும்


நம்மில் பலர் அதிக அளவில் செல்வம் வைத்திருக்க விரும்புகிறோம். அது, பணம், நிலம், விலையுயர்ந்த பொருட்கள், ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யம் அல்லது நாம் பெற விரும்பும் எண்ணற்ற பொருள்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அத்தகைய ஆசைகளின் பட்டியல் உலகில் நம் ஒவ்வொருவருக்கும் முடிவற்றதாகத் தோன்றலாம். நமக்கு இவ்வாறான ஆசைகள் இருக்கும்போது, தேவன் இந்த பூமிக்குரிய ஆசீர்வாதத்தை எப்படிப் பார்க்கிறார்? இதற்குப் பதில் சாலொமோன் ராஜா பிரசங்கி புத்தகத்தில் கொடுத்திருக்கிறார்.


பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே. பிரசங்கி 5:10


தேவனின் கண்ணோட்டத்தில், நமது செல்வம் மற்றும் வளங்களுக்கு எந்த மதிப்பும் முக்கியத்துவமும் இல்லை, அதனால்தான் அது "மாயை" என்று எழுதப்பட்டுள்ளது. பல மில்லியன் டாலர் மதிப்புள்ள மாளிகையோ, ஈர்க்கக்கூடிய வணிக சாம்ராஜ்யமோ அல்லது வேறு ஏதேனும் உடைமைகளோ நம்மிடம் இருந்தாலும், அவை அனைத்தும் தேவனின் பார்வையில் மதிப்பற்றவையாகக் கருதப்படுகின்றன.


ஜனங்கள் ஏன் தொடர்ந்து அதிக செல்வத்தை குவிக்க முற்படுகிறார்கள்? ஏற்கனவே வைத்திருப்பதில் ஏன் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை? தெய்வீக பண்பாகிய மனநிறைவு அவர்களிடம் இல்லாததால் எப்போதும் இன்னும் அதிகமாக விரும்புகிறார்கள். இன்னும் அதிகமாக விரும்பும் இந்த ஆசையுடன் நம்மில் பலர் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


நமக்குப் பிடித்தமான பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது, வயிறு நிறைந்தவுடன், ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன்கள் மீதம் இருந்தால் கூட, சாப்பிடுவதை நிறுத்தும்படி நம் வயிறு மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. இருப்பினும், பண விஷயங்களில், நாம் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. செல்வத்தின் மீதான நமது ஆசை பூர்த்தி செய்ய இயலாதது. மேலும் நம் உள்ளம் தொடர்ந்து அதிகமாக ஏங்கி நாம் திருப்தி அடைய முடியாமல் செய்கிறது. நமது வாழ்க்கை இயேசு மத்தேயுவில் குறிப்பிட்டது போல் உள்ளது.

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். மத்தேயு 6:21


கேட்க வேண்டிய கேள்வி - நீங்கள் ஏழையா அல்லது ஐசுவரியவானா?


நான் ஏழை, என்னிடம் சொந்தமாக எதுவுமில்லை. அதனால் இந்த செய்தி எனக்குப் பொருந்தாது என்று நம்மில் சிலர் சொல்லலாம். நாம் ஏழையாகவோ அல்லது ஐசுவரியவனாகவோ இருந்தால் தேவன் நம் ஒவ்வொருவரையும் எப்படிப் பார்க்கிறார்?


அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். லூக்கா 21:1-4


அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். லூக்கா 18:18-22


வேதாகமக் கோட்பாடுகளின் படி, பிச்சைக்காரர்கள் மற்றும் மிகவும் வறுமையில் இருப்பவர்கள் தவிர உலகில் உள்ள மற்றவர்கள் யாவரும் செல்வந்தராகக் கருதப்படுகிறார்கள். உங்களுக்கென்று ஏதேனும் சொத்து அல்லது சேமிப்பு இருந்தால், நீங்கள் செல்வந்தராகக் கருதப்படுவீர்கள். நீங்கள் மிகவும் ஏழ்மையானவர் என்று நொண்டிச் சாக்கு சொல்லாதீர்கள்.


கேட்க வேண்டிய கேள்வி - ஐசுவரியவானாக இருப்பது தவறா?


இது இன்னும் சில கேள்விகளை எழுப்புகிறது. நாம் ஐசுவரியவானாக இருந்தால், அது தவறா? நம்மால் இன்னும் தேவனைத் தேட முடியுமா? தேவ பயத்தோடு இருக்க முடியுமா? ஐசுவரியவானாக இருப்பது பாவமா?


  • ஐசுவரியவானாக இருப்பது பாவம் அல்ல. மேலும், ஐசுவரியவானாக இருப்பதில் தவறில்லை. உண்மையில் உலகில் நாம் அனுபவிக்கும் எல்லா ஆசீர்வாதங்களும் நமக்கு இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் அதே நேரத்தில் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவது கடினமாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். லூக்கா 18:24-25

  • நாம் ஐசுவரியவானாக மாறும்போது, ​​நம் மனம் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. நாம் குவித்து வைத்துள்ள செல்வத்தைச் சார்ந்து இருக்கத் தொடங்குகிறோம், அது நம் எண்ணங்களின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆக்கிரமிக்கின்றது.

  • செல்வத்தைக் குவிப்பது ஆணவத்திற்கும் உருவ வழிபாட்டிற்கும் வழிவகுக்கும். ஏனெனில், நாம் தேவனுக்குரிய முன்னுரிமைகளை விட்டுவிட்டு எப்போதும் வாங்குவது, விற்பது, லாபத்தை நாடிச் செல்வது போன்றவற்றில் மூழ்கிவிடுகிறோம்.


ஐசுவரியவான்களாக இருந்து தேவனுக்கு ஊழியம் செய்து, தேவனின் ஆசீர்வாதத்தை சுதந்தரமாகப் பெற்றவர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.


1. ஆபிரகாம் - ஆபிரகாம் ஒரு பெரிய ஐசுவரியவானாக இருந்தார். ஆதியாகமம் 24:35

இல், ஆபிரகாமின் மூத்த ஊழியக்காரன், லாபானைச் சந்தித்தபோது இதைக் குறித்து சாட்சியமளித்ததை வாசிக்கிறோம்.

கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார். ஆதியாகமம் 24:35


அவரிடம் அதிகமான செல்வம் இருந்தும் அவர் மனம் அதின் மேல் போகவில்லை.

விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே. எபிரேயர் 11:9-10,16


  1. அவர் வளமான வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு பரதேசியைப் போல கூடாரங்களிலே குடியிருந்தார். “அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்” என்று வசனம் கூறுகிறது.

  2. அவர் தேவனின் நகரத்திற்காக காத்திருந்தார், “தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்”.

  3. செல்வத்தின் மீதான அவருடைய மனப்பான்மை என்னவென்றால் - பூமியில் இருந்ததை விட மேன்மையானது அவருக்கு பரலோகத்தில் இருந்தது. “அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்”.


2. யோபு - கிழக்கு தேசத்தில் யோபு மிகப்பெரிய மனிதராகக் கருதப்பட்டார், அவருடைய செல்வம் ஆச்சரியப்படும் அளவில் இருந்தது.

அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். யோபு 1:3


அவர் தன்னிடம் இருந்த செல்வத்தின் மீது ஒருபோதும் நம்பிக்கை வைக்கவில்லை. யோபு 31:24-28 இல் தன் நண்பர்களிடம் அதையே கூறுகிறார்.

நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும், சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி: என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால், இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே. யோபு 31:24-28


அவர் தனது செல்வத்தை இழந்த போதும் தேவனை திட்டவில்லை. மாறாக, அவர் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருந்தார். மேலும் அவரிடம் இருந்த அனைத்தும் தேவனிடம் இருந்து தான் வந்தது என்று ஒப்புக்கொண்டார். இழப்பை எதிர்கொண்டாலும், இறுதியில் தேவனின் சித்தமே மேலோங்கியது என்பதை அவர் உணர்ந்தார்.

நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். யோபு 1:21


ஐசுவரியவான்களுக்கு தேவனின் அறிவுரை என்ன?


1. உங்கள் ஐசுவரியத்தில் தாராளமாக இருங்கள்


  • தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக நமக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஏராளத்தில் நாம் தாராளமாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். இந்த கருத்தை பவுல் தனது எழுத்துக்களில் மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அநுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு. 1 தீமோத்தேயு 6:17-19

  • எளியவர்களிடம் தாராளமாக இருக்க வேண்டும் என்று நம்மைக் கேட்கிறார், இது அவர் மோசேக்கு கொடுத்த கட்டளைகளில் ஒன்றாகும்.

  • நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். லேவியராகமம் 19:9-10

  • லாசருவின் கதையில், ​​ஐசுவரியவான் ஏன் நரகத்திற்குச் சென்றான்? திருடினானா? கொலை செய்தானா? விபச்சாரம் செய்தானா? இல்லை! பிச்சைக்காரனுக்கு இரக்கம் காட்டாததால் அனுப்பப்பட்டான்.

  • ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அநுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். லூக்கா 16:19-23,25


2. ஐசுவரியமும் மரணமும்

  • வேதம் ஐசுவரியத்தை மரணத்துடன் அடிக்கடி இணைத்துப் பேசுகிறது. யோபு தன் செல்வத்தை எல்லாம் இழந்தபோது, யோபு 1:21 இல் சொல்லப்பட்ட இதுவே அவரது சாட்சியம் "நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்;.... ".


மரணத்தின் போது நம்மிடம் உள்ள அனைத்தையும் விட்டுவிட்டு, நாம் கொடுத்த அனைத்தையும் நம்மோடு எடுத்துச் செல்கிறோம்!

  • ஐசுவரியத்திற்கும் தேவனுக்கும் திறவுகோல் - “ஐசுவரியம் உலகத்திற்கு”, “இருதயம் தேவனுக்கு" - தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட இருதயத்துடன் அவருக்குத் தகுதியான ஒரு வாழ்க்கையை வாழுங்கள், உலகத்தின் ஐசுவரியத்தை நாடாமல் இருங்கள். யோபு அதைத்தான் செய்தார்.


3. பேராசை மனப்பான்மையை விட்டொழியுங்கள்


  • ஐசுவரியங்களை வைத்திருப்பதை வேதம் தடை செய்யவில்லை, ஆனால் அவற்றைச் சார்ந்திருப்பதைக் குறித்து அது நம்மை எச்சரிக்கிறது. ஏனெனில் தேவன் இந்த ஐசுவரியங்களை நம் அனுபவமகிழ்ச்சிக்காக மட்டுமே தருகிறார்.

இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அநுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு. 1 தீமோத்தேயு 6:17-19


  • நம்மிடம் உள்ள செல்வத்தை நம்முடையது என்று தவறாகப் புரிந்துகொண்டு, அதன் பின் செல்வதில் ஈடுபடத் தொடங்குகிறோம், இது பாவத்திற்கு வழிவகுக்கும் பேராசை மனப்பான்மையை நமக்குள் ஏற்படுத்துகிறது.

பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். லூக்கா 12:15,20-21

  • R.ஸ்டான்லி அவர்களின் தியானம் ஒன்றிலிருந்து இந்த ஆலோசனையைப் படித்தேன் - மிகவும் உண்மையான, பின்பற்ற கடினமான ஒன்று.

உங்களிடம் செல்வம் இருந்தால், அவை இறந்த உடலில் உள்ள பூக்களைப் போல இருக்கட்டும்.
  • நாம் பூமிக்குரியவைகளைத் தேடாமல், கிறிஸ்துவுக்குரியவைகளைத் தேட வேண்டும். இது தேவனின் அறிவுரை.

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. கொலோசெயர் 3:1-3

  • கடின உழைப்பின் மூலம் ஐசுவரியவான்களாக மாறிய மற்றவர்களுடன் நாம் அடிக்கடி நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம், இது செல்வத்தைத் தேடுவதற்கு அதிக வேலை செய்ய நம்மைத் தூண்டும். எவ்வாறாயினும், தேவனின் சித்தத்துடன் இணைந்தால் மட்டுமே நாம் செல்வத்தை நாட வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நமது சொந்த ஆசைகள் அல்லது மற்றவர்களின் செல்வாக்கின் அடிப்படையில் மட்டும் செல்வத்தைத் தேடக் கூடாது.

  • பேராசை மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும் என்று தேவன் நம்மைக் கேட்கிறார்.

ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். சங்கீதம் 49:16-19


ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். சங்கீதம் 49:12


4. இருதயத்தின் வேண்டுதல்கள் - நீங்கள் அவருடன் நடந்து, அவரை விசுவாசித்தால், அந்த ஐசுவரியத்தைக் காணும்படிக்கு உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களைத் தந்தருள்வார்.


கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். சங்கீதம் 37:4


மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும். மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 16:1-3


5. தெய்வீக மனநிறைவு

  • மனநிறைவு என்பது தேவனிடம் இருந்து வரும் ஆசீர்வாதம், அவர் மீது விசுவாசத்தை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தால் மட்டுமே அது நமக்கு வரும். ஐசுவரியத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று நீங்கள் எவ்வளவு அதிகமாகச் சொல்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக ஐசுவரியத்தைத் தேடி தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருப்பீர்கள். உங்களிடம் இருப்பதில் ஒரு நாளும் திருப்தி அடையமாட்டீர்கள்.

  • உங்கள் இருதயம் தேவனிடம் இருந்தால் மட்டுமே மனநிறைவு கிடைக்கும்.


நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபிரேயர் 13:5


இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அநுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு. 1 தீமோத்தேயு 6:17-19

bottom of page